நித்தம் நூறு முறை ஒலிக்கும் அச்சொல்,
திகட்டவில்லை என் செவிகளுக்கு!
அளவில்லா இன்பம் வைத்தாய் இறைவா,
மழலை எனும் மொழி தனிலே!
பிறப்பின் நோக்கம் அறியாது வளர்ந்தேன்,
பிறப்பின் நோக்கம் அறியாது வளர்ந்தேன்,
அதனை உணர்ந்தேன், 'அம்மா' என்று அவன் அழைக்கையிலே!
தித்திக்கும் அச்சொல் கேட்டு, என் செவிகளின் தாகம் தணிய,
இனியொரு பிறவியும் வேண்டுமோ!